நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸா பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்: இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு சூளுரை 

காஸா சிட்டி: 

காஸா பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முனைப்பு காட்டுவோம் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கூறினார். 

காஸா பகுதிக்குச் செல்ல வேண்டிய மனிதாபிமான உதவிகள் சென்று சேரவில்லை. இதற்கு இஸ்ரேல் தான் முக்கிய காரணம் என்று அனைத்துலக சமூகம் குற்றஞ்சாட்டி வருகிறது. 

இந்நிலையில் காஸாவில் கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான மனிதாபிமான உதவிகளே வழங்கப்படும் என்று இதற்கு முன் இஸ்ரேல் அறிவித்தது. 

இருப்பினும், காஸாவிற்கு உதவிகள் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் நெதன்யாஹு கூறினார். 

இஸ்ரேல் படையினர் காஸா பிராந்தியத்தைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று சூளுரைத்தார். 

ஆனாலும் இஸ்ரேலிய படையினர் தாக்குதல் காரணமாக 91 அப்பாவி பொதுமக்கள் பலியானதான GAZA CIVIL DEFENCE AGENCY தெரிவித்திருந்தது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset