நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நிலையான பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் ஆறு முக்கிய வியூக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது: அன்வார் இப்ராஹிம் தகவல் 

கோலாலம்பூர்: 

நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கவும் அதன் முக்கியத்துவத்தைத் தற்காக்கவும் அரசாங்கம் ஆறு முக்கிய வியூக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். 

முதன்மை பொருளாதார மேற்கோள்களை அரசாங்கம் கண்காணித்தல், அமெரிக்காவுடன் சுமூகமான பேச்சு வார்த்தையை மேற்கொள்ளுதல், சிறு,குறு நடுத்தர வியாபாரிகளுக்கு உதவுதல், வட்டார வர்த்தக ஒத்துழைப்பு, மற்றும் மேம்பாட்டு திட்டங்களை விரைவுப்படுத்துதல் ஆகியவை அந்த ஐந்து முக்கிய வியூக நடவடிக்கைகளாகும். 

இவையாவும் மடானி பொருளாதாரத்தின் புதிய கொள்கையை கொண்டு சேர்க்கிறது. இந்த மடானி பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரமும் போட்டியாற்றலும் மேம்படும் என்று அன்வார் குறிப்பிட்டார். 

முன்னதாக, அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான மக்களவை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இவ்வாறு கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset