நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெஅடிலான் உச்சமன்றக்  கூட்டத்தில் ரபிசி கலந்து கொண்டார்: பிரதமர்

கோலாலம்பூர்:

விடுமுறையில் இருந்த போதிலும் கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லி நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தினார்.

கெஅடிலான் தேர்தல் முடிவுகளை கிளை மட்டத்தில் விவாதிக்க நேற்று நடந்த கூட்டத்தில் பொருளாதார அமைச்சர் கலந்து கொண்டார்.

நேற்று நாங்கள் சந்தித்தோம். தேர்தல் முடிவுகளைப் பற்றி விவாதித்தோம். எல்லாம் நன்றாக நடந்தது என்று இன்று ஒரு தனியார் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் கூறினார்.

முன்னதாக, ரபிஸி விடுப்பு எடுத்ததாகக் கூறப்பட்டது.

குறிப்பாக 2025 கெடிலான் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செயல்முறைக்கு முன்னதாக, கெஅசிலான் அடிமட்ட மக்களிடையே சூடான விவாதங்களைத் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset