
செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை
நியூயார்க்:
அமெரிக்காவில் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள ஹண்டிங்டன் பேங்க் அரங்கில் இந்தர்மியாமி அணியும் கொலம்பஸ் அணியும் அண்மையில் மோதின.
கடைசிவரை போராடிய கொலம்பஸ் அணியினால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்பதால் 1-0 என இந்தர்மியாமி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க மக்கள் அளவுக்கதிகமாகக் கூடினார்கள்.
இந்தப் போட்டியைப் பார்க்க 60,614 பார்வையாளர்கள் அரங்கிற்கு வந்திருந்தார்கள்.
இந்த அரங்கில் தேசிய கால்பந்து லீக்கைத் தவிர்த்து அதிக பார்வையாளர்கள் பங்கேற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸி எம்எல்எஸ் தொடரில் இணைத்தற்குப் பிறகு இந்தளவுக்கு கூட்டம் வருவது இது இரண்டாவது முறையாகும்.
கால்பந்து விளையாட்டில் மெஸ்ஸி தலை சிறந்தவர். அதனால்தான் அவர் பல தரப்பு மக்களையும் கால்பந்து பார்க்க ஈர்க்க முடிகிறது என்று இந்தர்மியாமி வீரர் பெஞ்சமின் க்ரெமாச்சி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2025, 5:48 pm
மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து: தகுதி சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி
May 20, 2025, 10:21 am
2025இல் உலகின் பணக்கார விளையாட்டு வீரர் ரொனால்டோ தான்
May 20, 2025, 10:20 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் தோல்வி
May 19, 2025, 9:45 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா சாம்பியன்
May 19, 2025, 9:01 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
May 18, 2025, 3:08 pm
இங்கிலாந்து FA கிண்ண இறுதியாட்டம்: கிரிஸ்டல் பேலஸ் 1 - மென்செஸ்டர் சிட்டி 0
May 18, 2025, 3:02 pm
தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டி 2025: பெர்லி தான் - எம். தீனா இணை வாகை சூடினர்
May 17, 2025, 6:57 pm