
செய்திகள் விளையாட்டு
மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை
நியூயார்க்:
அமெரிக்காவில் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள ஹண்டிங்டன் பேங்க் அரங்கில் இந்தர்மியாமி அணியும் கொலம்பஸ் அணியும் அண்மையில் மோதின.
கடைசிவரை போராடிய கொலம்பஸ் அணியினால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்பதால் 1-0 என இந்தர்மியாமி வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் போது லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க மக்கள் அளவுக்கதிகமாகக் கூடினார்கள்.
இந்தப் போட்டியைப் பார்க்க 60,614 பார்வையாளர்கள் அரங்கிற்கு வந்திருந்தார்கள்.
இந்த அரங்கில் தேசிய கால்பந்து லீக்கைத் தவிர்த்து அதிக பார்வையாளர்கள் பங்கேற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மெஸ்ஸி எம்எல்எஸ் தொடரில் இணைத்தற்குப் பிறகு இந்தளவுக்கு கூட்டம் வருவது இது இரண்டாவது முறையாகும்.
கால்பந்து விளையாட்டில் மெஸ்ஸி தலை சிறந்தவர். அதனால்தான் அவர் பல தரப்பு மக்களையும் கால்பந்து பார்க்க ஈர்க்க முடிகிறது என்று இந்தர்மியாமி வீரர் பெஞ்சமின் க்ரெமாச்சி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2025, 3:10 pm
மலேசிய கிண்ணம் இறுதியாட்டம்: மதியம் 2 மணி முதல் அரங்கத்திற்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டன
April 26, 2025, 11:56 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி தோல்வி
April 25, 2025, 8:53 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
April 24, 2025, 8:43 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 24, 2025, 8:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
April 23, 2025, 5:10 pm
46 ஆவது ஆண்டாக பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் போட்டி
April 23, 2025, 8:37 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 23, 2025, 8:34 am