நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை

நியூயார்க்:

அமெரிக்காவில் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள ஹண்டிங்டன் பேங்க் அரங்கில் இந்தர்மியாமி அணியும் கொலம்பஸ் அணியும்  அண்மையில் மோதின.

கடைசிவரை போராடிய கொலம்பஸ் அணியினால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்பதால் 1-0 என இந்தர்மியாமி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் போது லியோனல் மெஸ்ஸியைப் பார்க்க மக்கள் அளவுக்கதிகமாகக் கூடினார்கள். 

இந்தப் போட்டியைப் பார்க்க 60,614 பார்வையாளர்கள் அரங்கிற்கு வந்திருந்தார்கள்.

இந்த அரங்கில் தேசிய  கால்பந்து லீக்கைத் தவிர்த்து அதிக பார்வையாளர்கள் பங்கேற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மெஸ்ஸி எம்எல்எஸ் தொடரில் இணைத்தற்குப் பிறகு இந்தளவுக்கு கூட்டம் வருவது இது இரண்டாவது முறையாகும்.

கால்பந்து விளையாட்டில் மெஸ்ஸி தலை சிறந்தவர். அதனால்தான் அவர் பல தரப்பு மக்களையும் கால்பந்து பார்க்க ஈர்க்க முடிகிறது என்று இந்தர்மியாமி வீரர் பெஞ்சமின் க்ரெமாச்சி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset