நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்: தேர்தல் பரப்புரையின் போது ஏழு போலீஸ் புகார்கள் பதிவு 

தாப்பா: 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பரப்புரைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, இடைத்தேர்தல் தொடர்பாக பரப்புரையின் போது ஏழு குற்றங்கள் புரிந்த நிலையில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டதாக பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் கூறினார். 

அவதூறு பரப்பியதாக ஐந்து குற்றச்சாட்டுகளில் இரு குற்றச்சாட்டுகளுக்கு எதிராக காவல்துறை விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

சம்பந்தப்பட்ட சம்பவங்கள் விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் எந்தவொரு கைது நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறும் என்று மலேசியத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset