நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்காவுடன் ஆசியான் தொடர்ந்து நல்லுறவு பேணும்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்து 

கோலாலம்பூர்: 

அமெரிக்காவுடன் தொடர்ந்து பன்முக வர்த்தகத்தை தொடர ஆசியான் கூட்டமைப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளது 

இந்த கூட்டு இணக்கமானது ஆசியான் பொருளாதார அமைச்சர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார் 

இறக்குமதி வரி விதிப்பு நடவடிக்கை தொடர்பில் ஒரு சுமூகமான தீர்வு அவசியமாகிறது என்று அன்வார் தெரிவித்தார் 

ஆசியான் கூட்டமைப்பு என்றென்றும் அமைதியை விரும்பும் கூட்டமைப்பாகும். உலக பொருளாதார சூழலில் ஆசியான் கூட்டமைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு அளிக்கிறது 

மலேசியாவிற்கு அமெரிக்கா 24 விழுக்காடு இறக்குமதி வரி விதிப்பை கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset