நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தற்கால சவால்களைக் கண்டு ஆசியான் பின்வாங்காது: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

உலகளவில் ஏற்பட்டுள்ள தற்கால சவால்களைக் கண்டு ஆசியான் கூட்டமைப்பு பின்வாங்காது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார் 

உலக பொருளாதார இருக்கையில் ஆசியான் ஒன்றும் அந்நிய கூட்டமைப்பு இல்லை. மாறாக, ஆசியானுக்கு தனித்த அடையாளம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 

ஆசியான் என்று குறிப்பிடும் போது அனைத்து 10 உறுப்பு நாடுகளின் ஒத்தழைப்பு பெரும் அவசியமாகிறது. 

ஆசியான் உலக பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய வருவாயைக் கொண்டு வரும் கூட்டமைப்பாக உள்ளது. இதனால் ஆசியான் தொலைநோக்கு பார்வையைக் கொண்டு செயல்படுகிறது என்று அன்வார் இப்ராஹிம் சொன்னார். 

2025 ஆசியான் தலைவர் பொறுப்பினை மலேசியா ஏற்றுள்ளது.  மலேசியாவின் தலைவர் பொறுப்பு தூரநோக்கு இலக்கினை கொண்டுள்ளது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset