நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்கா விதித்துள்ள உயர் வரிகள் பலவீனமான அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டவை: பிரதமர்

புத்ராஜெயா:

அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்த கூடுதல் வரிகள் பலவீனமான அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

அதன் அறிமுகமும் வல்லரசால் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

இருப்பினும், சம்பந்தப்பட்ட நாடு எடுத்த முடிவு பல நாடுகளால் விசித்திரமாகவும் சர்ச்சைக்குரியதாகவும் பார்க்கப்பட்டாலும், அமெரிக்காவின் அணுகுமுறையை மலேசியா எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

சில நேரங்களில் எதிர்பாராத அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் காணப்படுகின்றன.

இதில் மிகவும் பலவீனமான அடிப்படையுடன் கூடிய கட்டண அறிவிப்புகளும், சர்ச்சைக்குரிய அடிப்படையில் வரிக் கட்டணங்களை நிர்ணயிப்பதும் அடங்கும்.

சில நாடுகள் பெங்குவின் மட்டுமே வசிக்கும் தீவுகளையும் உள்ளடக்கியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதாவது அமெரிக்காவின் கூடுதல் வரிகள் குறித்த முடிவு முழுமையாக விசாரிக்கப்படவில்லை என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset