
செய்திகள் தமிழ் தொடர்புகள்
எச்ஆர்டி கோர்ப்புடனான சந்திப்பு எதிர்கால திறன்களுடன் இளைஞர்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு வழிவகுத்தது: கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்
கோலாலம்பூர்:
எச்ஆர்டி கோர்ப்புடனான சந்திப்பு எதிர்கால திறன்களுடன் இளைஞர்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு வழிவகுத்தது என்று தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் மலேசியா வந்திருந்தார்.
இந்த பயணத்தின் ஓர் அங்கமாக தமிழக மாணவர்களுடன் அவர் எச்ஆர்டி கோர்ப் தலைமையகத்திற்கு சென்றார்.
எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குனர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் அவரையும் மாணாக்கர்களையும் வரவேற்று சிறப்பித்தார்.
மலேசியாவில் எச்ஆர்டி கோர்ப்பின் செயல்பாடுகள் குறித்து அதன் அதிகாரிகள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில் தொழிலாளர் பயிற்சி, திறன் மேம்பாட்டில் அதன் பங்கை ஆராய அரசுப் பள்ளி மாணவர்களுடன் மலேசியாவின் எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தைப் பார்வையிட்டேன்.
வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக பயிற்சித் திட்டங்கள், தொழில்துறை வேலை வாய்ப்புகள், தொழில் பயிற்சிக்கு எச்ஆர்டி கோர்ப் நிதியளிக்கிறது.
கல்வியை மாற்றியமைப்பதும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களுடன் இளைஞர்களை மேம்படுத்துவது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் இலக்காக உள்ளது.
அதன் அடிப்படையில் எச்ஆர்டி கோர்ப்புடனான சந்திப்பு பெரும் பயனாக இருந்தது என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 12:13 pm
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க பழனிசாமி தீவிர முயற்சி
March 31, 2025, 4:27 pm
அன்பு, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் வளரட்டும்: விஜய் ரமலான் வாழ்த்து
March 29, 2025, 8:17 pm
திமுக, பாஜகவை விமர்சித்துப் பேசிய விஜய் அதிமுக குறித்து பேசாததற்கு காரணம் என்ன?: இபிஎஸ் விளக்கம்
March 29, 2025, 11:29 am
மத்தியில் பாஜக ஆட்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத பாசிச ஆட்சிதான் திமுகவின் ஆட்சி: விஜய் குற்றச்சாட்டு
March 22, 2025, 4:34 pm
மணிப்பூர் போல் நாம் ஆக்கப்படுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
March 21, 2025, 4:53 pm