நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் திருமணத்தில் உறுதியான நம்பிக்கையுடன் பொன்விழா கொண்டாடும் தம்பதிகளை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் திருமணத்தில் உறுதியான நம்பிக்கையுடன் பொன்விழா கொண்டாடும் தம்பதிகளை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி Raffles City Convention Centreஇல் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக அதிபர் தர்மன் சண்முகரத்னம் தமது மனைவியுடன் கலந்துகொண்டார்.

அதிபர் சுமார் 200 தம்பதிகளுக்குப் பொன்விழா கொண்டாட்ட அன்பளிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகப் பொன்விழா கொண்டாடும் தம்பதிகள் தங்கள் உற்றார் உறவினர் முன்னிலையில் திருமண வாக்குறுதியைப் புதுப்பித்தனர்.

ஆண்டுதோறும் திருமணப் பதிவகம், முஸ்லிம் திருமணப் பதிவகம், Families for Life மன்றம் இணைந்து ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு 1,000க்கும் மேற்பட்டோர் பங்குபெற்றனர்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset