நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகா மகளிர் பிரிவின் நடைப் போட்டிகள்  தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோத்தா கெமுனிங்:

மஇகா மகளிர் பிரிவின் நடைப் போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.

மஇகா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.

மஇகா தேசிய மகளிர் பிரிவு ஏற்பாட்டில் நடைப் போட்டி இன்று கோத்தா கெமுனிங் லேக்சைட் பார்க்கில்  நடைப்பெற்றது

ஆரோக்கியமான வாழ்க்கை நாம் வாழ வேண்டும் என்பதை நினைவுப்படுத்தும் வகையில் மஇகா மகளிர் பிரிவினரின் ஏற்பாட்டில் டிஎஸ்வி நடைப் போட்டி நடைபெற்றது.

 210 பேர் இப்போட்டியில் கலந்து கொண்ட வேளையில் ஒன்று முதல் 20 வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர்கள் டத்தோ அசோஜன், டத்தோ டி. முருகையா, தேசிய விளையாட்டுப் பிரிவுத் தலைவர் ஆண்ட்ரூ டேவிட் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றவர்கள் பரிசுகளை எடுத்து வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வில் பேசிய டத்தோஸ்ரீ சரவணன், பெண்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கி இந்த போட்டி நடத்தப்பட்டது. இது போன்ற போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும்.

அதற்கான நடவடிக்கைகளை மஇகா மகளிர் பிரிவு மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக மஇகா மகளிர் பிரிவினர் மத்தியில் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையிலும் இந்த போட்டியை ஏற்பாடு செய்ததாக அதன் தலைவர்  சரஸ்வதி நல்லத்தம்பி  தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset