
செய்திகள் மலேசியா
பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான அனுமதிக்கு உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றி: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
பத்துமலையில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு திட்டங்களுக்கான அனுமதிக்கு உடனடியாக உத்தரவிட்ட பிரதமருக்கு நன்றி.
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
பத்துமலை தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமருக்கு தேவஸ்தானம் அழைப்பு கொடுத்திருந்தது.
ஆனால், தைப்பூச தினத்தன்று அவர் வர முடியாததால் அவர் இன்று பத்துமலைக்கு சிறப்பு வருகை புரிந்தார்.
பத்துமலையில் நடைபெற்று வரும் தைப்பூச ஏற்பாடுகளையும் அவர் பார்வையிட்டார்.
அதே வேளையில் பத்துமலையில் கட்டப்படவிருக்கும் பிரமாண்டமான பல்நோக்கு மண்டபம் குறித்தும் பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அந்த இடத்தை நேரில் பிரதமர் பார்வையிட்டார்.
மேலும் இந்த திட்டங்களுக்கு அனுமதி கிடைப்பதற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் பிரதமரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனே இந்த திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என மாநில மந்திரி புசாருக்கு உடனடியாக உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை வழங்கிய பிரதமருக்கு எனது மனப்பூர்வமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் வரும் தைப்பூச தினத்தன்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி பத்துமலைக்கு வருகிறார்.
அந்த வருகையின் போது அவர் மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பார் என தேவஸ்தானம் நம்புகிறது என்று டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 8:06 pm
விபத்தில் மரணமடைந்த மாணவி நிமலா சங்கரி குழும்பத்தாருக்கு யூனிமேப் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது
September 17, 2025, 7:02 pm
முஸ்லிம் அல்லாத கட்சிகளால் பாஸ் எளிதில் குழப்பமடையக் கூடாது: டத்தோஸ்ரீ ரமணன்
September 17, 2025, 6:34 pm
ஷாரா அழுததுடன் திருடியதை மறுத்தார்; கடவுள் மீது சத்தியம் செய்தார்: சாட்சி
September 17, 2025, 6:32 pm
எஸ்டிபிஎம், மெட்ரிகுலேஷன் படிப்புகளுக்கு உயர் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும்: நிக் நஸ்மி
September 17, 2025, 6:31 pm
112 இடங்களை வெல்ல முடியாத கட்சிகள் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில் அர்த்தமில்லை: துன் மகாதீர்
September 17, 2025, 6:29 pm
பாஸ் கட்சி 43 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு பெர்சத்து நிதியே காரணம்: மார்சுக்கி
September 17, 2025, 6:28 pm
ரபிசியின் மகனைத் தாக்கியவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை; சிசிடிவி தெளிவாக இல்லை: ஐஜிபி
September 17, 2025, 1:27 pm
ஷாராவின் தாயாரை சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளை தடயவியல் மருத்துவர் மறுத்தார்
September 17, 2025, 1:25 pm
கூட்டரசுப் பிரதேச மாநில தமிழ்ப்பள்ளிகள் இடையிலான மாபெரும் பூப்பந்து போட்டி: செப்டம்பர் 27இல் நடைபெறும்
September 17, 2025, 1:24 pm