நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு மாநிலத்தில் 239ஆவது தைப்பூசத் திருவிழா: பினாங்கு தண்ணீர்மலை ஶ்ரீ பாலதண்டாயுதபானி ஆலயத்தில் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது 

ஜார்ஜ்டவுன்: : 

மலேசியாவின் வட மாநிலங்களில் ஒன்றான பினாங்கு மாநிலத்தில் எதிர்வரும் பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூசத் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறவுள்ளது 

பினாங்கு மாநிலத்தில் 239ஆவது தைப்பூசத் திருவிழா கொண்டாட்டம் இதுவாகும். திருமுருகனின் ஆசியைப் பெற்று அனைத்து இந்து பெருமக்களும் தைப்பூச கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று தண்ணீர்மலை ஶ்ரீ பாலதண்டாயுதபானி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது 

எதிர்வரும் பிப்ரவரி 10ஆம் தேதி தங்க ரத ஊர்வலம் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து புறப்படவிருக்கிறது. தங்க ரத ஊர்வலம் அதிகாலை 6 மணிக்கு புறப்படும் வேளையில் அதே நாளில் ஆலயத்தைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

தேங்காய் அர்ச்சனைக்கு 6 ரிங்கிட்டும் பால் குடத்திற்கு 5 ரிங்கிட்டும் காவடிகளுக்கு 12 ரிங்கிட்டும் வசூலிக்கப்படுகிறது 

பிப்ரவரி 11ஆம் தேதி தைப்பூச திருவிழாவில் கலந்து கொண்டு முருக பெருமானின் ஆசியை பெறுமாறு அனைவரையும் ஆலய நிர்வாகம் அழைக்கின்றது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset