
செய்திகள் மலேசியா
செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
கோலாலம்பூர்:
நூறு ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்புமிக்க செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
தமிழ் நாடு பிள்ளையார் பட்டியைச் சேர்ந்த சிவஸ்ரீ பிச்சை குருக்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட இந்த மகா கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தி வைத்தனர்
கடந்த 1893ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை நகரத்தார் கட்டி கடந்த 1902ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் செய்தார்கள்.
இது தான் ஆலயத்தின் முதல் கும்பாபிஷேக விழாவாகும்.
அதனைத் தொடர்ந்து இன்று ஏழாவது மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இக்கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
ஆலய காரியக்காரர் பி.எல்.சிதம்பரம் செட்டியார், தலைவர் எஸ்.ஓ.கே.சிதம்பரம் செட்டியார், ஆலயச் செயலாளர், பொருளாளர் எம். மெய்யப்பன் செட்டியார், நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா, டத்தோ ஆர். இராமநாதன், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை ஸ்ரீ சுப்பிரமணியர் பரிபாலன சபா தலைவர் டத்தோ சுரேஷ்குமார், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 6, 2025, 10:31 pm
சாரா மூலம் பொருட்களை வாங்குவதற்கான அமைப்பு திருப்தி அளிக்கிறது: பிரதமர்
September 6, 2025, 10:28 pm
எனது அரசியல் எதிர்காலம் கட்சியுடன் பிணைக்கப்படவில்லை: கைரி
September 6, 2025, 10:27 pm
சுங்கை பூலோ மருத்துவமனையில் நடந்த மோதலை தடுக்க முயன்ற போலிஸ் அதிகாரியைத் தாக்கிய ஆடவர் கைது
September 6, 2025, 10:25 pm
ஷாரா கைரினா வழக்கின் நோயியல் நிபுணர் சாட்சி, நெட்டிசன்களிடமிருந்து மிரட்டல்கள் வந்ததாக போலிசில் புகார்
September 6, 2025, 7:20 pm
பெருவாஸ் தமிழ்ப்பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் விமரிசையாக நடந்தேறியது
September 6, 2025, 6:56 pm
புதன்கிழமை காலை முதல் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்டது
September 6, 2025, 6:38 pm
தமிழ் உள்ளடக்க கண்காணிப்பாளர்களை நியமிக்க தவறினால் டிக் டாக் தடை செய்யப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
September 6, 2025, 4:00 pm
விசா முடிந்த பின் 90 நாட்கள் வரை மலேசியாவில் தங்கியிருக்கும் அந்நிய நாட்டினருக்கு அபராதம்: சைபுடின்
September 6, 2025, 3:42 pm
அதிருப்திகளை வெளிப்படுத்த தேசிய முன்னணி உச்ச மன்றத்தை மஇகா பயன்படுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
September 6, 2025, 3:28 pm