செய்திகள் மலேசியா
செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
கோலாலம்பூர்:
நூறு ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்புமிக்க செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று விமரிசையாக நடைபெற்றது.
தமிழ் நாடு பிள்ளையார் பட்டியைச் சேர்ந்த சிவஸ்ரீ பிச்சை குருக்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட இந்த மகா கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்தி வைத்தனர்
கடந்த 1893ஆம் ஆண்டு இந்த ஆலயத்தை நகரத்தார் கட்டி கடந்த 1902ஆம் ஆண்டு முதல் கும்பாபிஷேகம் செய்தார்கள்.
இது தான் ஆலயத்தின் முதல் கும்பாபிஷேக விழாவாகும்.
அதனைத் தொடர்ந்து இன்று ஏழாவது மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் இக்கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.
ஆலய காரியக்காரர் பி.எல்.சிதம்பரம் செட்டியார், தலைவர் எஸ்.ஓ.கே.சிதம்பரம் செட்டியார், ஆலயச் செயலாளர், பொருளாளர் எம். மெய்யப்பன் செட்டியார், நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இந்த மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
லோட்டஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா, டத்தோ ஆர். இராமநாதன், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை ஸ்ரீ சுப்பிரமணியர் பரிபாலன சபா தலைவர் டத்தோ சுரேஷ்குமார், குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 10:34 pm
இந்த ஆண்டு 8,006 பேர் எஸ்பிஎம் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்: ஃபட்லினா
December 25, 2025, 10:33 pm
அவதூறான காணொலியை மீண்டும் பகிர்ந்ததற்காக அம்னோ சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஶ்ரீ சஞ்ஜீவன்
December 25, 2025, 7:44 pm
பெர்லிஸ் மந்திரி புசார் பதவியை முஹம்மத் சுக்ரி ராஜினாமா செய்தார்
December 25, 2025, 2:55 pm
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்
December 25, 2025, 2:52 pm
காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை
December 25, 2025, 2:52 pm
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
December 25, 2025, 2:50 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்
December 25, 2025, 1:21 pm
அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்
December 25, 2025, 12:54 pm
