நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முதலீட்டில் சீனாவைவிட அமெரிக்கா இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளது: அன்வார்

லண்டன்:

முதலீட்டில் சீனாவை காட்டிலும்  அமெரிக்கா இன்னும் உயர்ந்த நிலையில் உள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

சீனாவுடனான வணிக உறவுகள் அதிகரித்து வருவதால், மலேசியா சீனாவை நோக்கிச் செல்வதாகவும் அமெரிக்காவிலிருந்து விலகிச் செல்கிறது என்ற ஊகத்தையும் நான் முழுமையாக நிராகரிக்கிறேன்.

பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் நடைமுறைக்கு ஏற்றவாறு செயல்படுவது தான் மலேசியாவின் இலக்காகும்.

குறிப்பாக உலகளவில் அதிகரித்து வரும் நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, இரு வல்லரசு நாடுகளுடனும் நல்ல உறவுகளைப் பேண விரும்புகிறது.

அமெரிக்கா, சீனாவுடனான மலேசியாவின் உறவுகள் பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட நலன்களில் நங்கூரமிடப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் கூறினார்.

மலேசியா சீனாவை நோக்கிச் செல்வது பற்றிய அனைத்து பேச்சுக்களையும் மீறி, மலேசியாவில் தொழில்நுட்பத் துறையில், அந்நிய நேரடி முதலீட்டின் மிகப்பெரிய ஆதாரமாக அமெரிக்கா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதே உண்மை.

லண்டன் பொருளாதார பள்ளியில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset