
செய்திகள் உலகம்
சாங்கி விமான நிலையத்தில் திரைச்சீலைக்குத் தீ வைத்த ஆடவர் கைது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் திரைச்சீலைக்குத் தீ வைத்த சந்தேகத்தில் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த 33 வயது ஆடவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.
நேற்று (12 டிசம்பர்) அதிகாலை 2.15 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் நடந்த சம்பவம் குறித்துத் தகவல் பெற்றதாகக் காவல்துறை கூறியது.
துணைக் காவல்துறை அதிகாரிகளிடம் அவர் சிகரெட் தருமாறு கேட்டபோது அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆடவர் அதிகாரிகளிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகள் அங்கு வருவதற்கு முன்னர், ஆடவர் அறையிலிருந்த திரைச்சீலையை அகற்றி அதற்குத் தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தமது கோரிக்கை ஏற்கப்படவில்லையென்றால் தீயைப் பரவச்செய்யப்போவதாக அவர் எச்சரித்தார்.
தீயை விமான நிலையக் காவல்துறை அணைத்தது.
தீயை அணைக்கும் பணியின்போது அதிகாரிகளின் மீது ஆடவர் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறை சொன்னது.
அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு 7 ஆண்டு் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm
தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து பேதொங்தார்ன் ஷினவாத்ரா தற்காலிகமாக நீக்கப்பட்டார்
July 1, 2025, 3:22 pm
வரி மசோதா நிறைவேற்றப்பட்டால் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன்: எலான் மஸ்க் உறுதி
July 1, 2025, 10:49 am
ஜூலை மாதத்தில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் குறைகிறது
June 29, 2025, 5:14 pm
சிங்கப்பூரில் இனி முதல்முறை ரத்த தானம் செய்வோர் வயது வரம்பு 60இலிருந்து 65க்கு உயர்கிறது
June 28, 2025, 1:47 pm