செய்திகள் உலகம்
சாங்கி விமான நிலையத்தில் திரைச்சீலைக்குத் தீ வைத்த ஆடவர் கைது
சிங்கப்பூர்:
சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் திரைச்சீலைக்குத் தீ வைத்த சந்தேகத்தில் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த 33 வயது ஆடவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்.
நேற்று (12 டிசம்பர்) அதிகாலை 2.15 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் நடந்த சம்பவம் குறித்துத் தகவல் பெற்றதாகக் காவல்துறை கூறியது.
துணைக் காவல்துறை அதிகாரிகளிடம் அவர் சிகரெட் தருமாறு கேட்டபோது அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆடவர் அதிகாரிகளிடம் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
காவல்துறை அதிகாரிகள் அங்கு வருவதற்கு முன்னர், ஆடவர் அறையிலிருந்த திரைச்சீலையை அகற்றி அதற்குத் தீ வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
தமது கோரிக்கை ஏற்கப்படவில்லையென்றால் தீயைப் பரவச்செய்யப்போவதாக அவர் எச்சரித்தார்.
தீயை விமான நிலையக் காவல்துறை அணைத்தது.
தீயை அணைக்கும் பணியின்போது அதிகாரிகளின் மீது ஆடவர் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தியதாகவும் காவல்துறை சொன்னது.
அவர் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு 7 ஆண்டு் வரை சிறையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
ஆதாரம் : CNA
தொடர்புடைய செய்திகள்
January 17, 2025, 12:18 pm
உலகின் ஆகப் பரபரப்பான 5 விமான நிலையங்கள் என்ன தெரியுமா?
January 17, 2025, 10:04 am
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த உடன்படிக்கை
January 16, 2025, 9:02 pm
மதச்சார்பின்மை, சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வங்கதேச குழு பரிந்துரை
January 16, 2025, 8:48 pm
15 மாத இஸ்ரேல் - காஸா போர் முடிவுக்கு வருகிறது: கத்தார் பிரதமர் ஷேக் முஹம்மது
January 15, 2025, 4:10 pm
வியாட்நாம் அதன் அரசாங்க தொலைக்காட்சி ஒளியலை சேவையை நிறுத்தியது
January 15, 2025, 1:10 pm
போலி ஜம்ஜம் நீர் விற்பனை: $2.5 மில்லியன் டாலர் லாபம் ஈட்டிய நபர் கைது
January 15, 2025, 11:32 am
சந்தையில் புட்டு விற்பனை செய்யும் டிரம்ப் போல இருக்கும் நபர்: பாகிஸ்தானில் அதிசயம்
January 15, 2025, 10:58 am
தென் கொரியா அதிபர் யுன் சுக் இயோல் கைது: ஊழல் தடுப்பு அதிகாரிகள் நடவடிக்கை
January 15, 2025, 10:56 am