செய்திகள் மலேசியா
துபாய் எக்ஸ்போ 2020 மூலம் 7.2 பில்லியன் ரிங்கிட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: பிரதமர் தகவல்
புத்ராஜெயா:
துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 (Expo 2020) மூலம் 7.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மலேசியா கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என்றும் 14 மலேசிய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஓமன், கட்டார், இங்கிலாந்து, ஐக்கிய அரபு சிற்றரசு, அமெரிக்கா ஆகியவையே அந்த வெளிநாடுகள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் எக்ஸ்போ 2020 மூலம் எட்டு முதல் பத்து பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர், இரண்டு வாரங்களிலேயே மலேசியா இந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்த 25 வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், பல்வேறு அமைச்சுகள், முகமைகள் மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு அந்த இலக்கை கடக்க முடியும் எனும் நம்பிக்கை உள்ளதாகவும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
மேலும், எண்ணெய், எரிவாயு, உயிரி தொழில்நுட்ப ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 7:00 pm
நாளை அம்பாங் பார்க்கில் எந்தக் கூட்டத்திற்கும் அனுமதி இல்லை; தடை விதிக்கப்படுகிறது: போலிஸ்
October 25, 2025, 3:02 pm
சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 25, 2025, 12:38 pm
அதிகமான பொய் மோசடிகள்: டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகங்களை மூடினார்
October 25, 2025, 12:25 pm
3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
October 25, 2025, 11:44 am
பிரேசில், தென்னாப்பிரிக்க அதிபர்களை பிரதமர் இன்று சந்திக்கிறார்
October 25, 2025, 11:12 am
ஜோ லோ மீதான விசாரணை இன்னும் தீவிரமாக உள்ளது: ஐஜிபி
October 25, 2025, 10:51 am
வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உட்பட 8 பேர் மீட்கப்பட்டனர்
October 25, 2025, 10:14 am
காஜாங்கில் உள்ள கால்வாயில் 'ஜோசப்' என பச்சை குத்தப்பட்ட ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
