செய்திகள் மலேசியா
துபாய் எக்ஸ்போ 2020 மூலம் 7.2 பில்லியன் ரிங்கிட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: பிரதமர் தகவல்
புத்ராஜெயா:
துபாயில் நடைபெற்று வரும் எக்ஸ்போ 2020 (Expo 2020) மூலம் 7.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மலேசியா கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன என்றும் 14 மலேசிய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, எகிப்து, இந்தியா, ஈரான், ஓமன், கட்டார், இங்கிலாந்து, ஐக்கிய அரபு சிற்றரசு, அமெரிக்கா ஆகியவையே அந்த வெளிநாடுகள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்கள் வரை நீடிக்கும் எக்ஸ்போ 2020 மூலம் எட்டு முதல் பத்து பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர், இரண்டு வாரங்களிலேயே மலேசியா இந்தளவு முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

அடுத்த 25 வாரங்களுக்கு இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்ப்பதாகவும், பல்வேறு அமைச்சுகள், முகமைகள் மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்போடு அந்த இலக்கை கடக்க முடியும் எனும் நம்பிக்கை உள்ளதாகவும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.
மேலும், எண்ணெய், எரிவாயு, உயிரி தொழில்நுட்ப ஆய்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:37 pm
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொளி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
March 26, 2026, 12:14 pm
வறட்சி நீங்கப் பிரார்த்தனை: அராவ் அரண்மனையில் 1,000 பேர் பங்கேற்ற 'அல்-இஸ்திஸ்காராஹ்' தொழுகை
March 26, 2026, 12:13 pm
கூட்டு முயற்சியால் விளைந்த அற்புதம்: கலைநயத்துடன் மிளிரும் 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு
March 26, 2026, 12:13 pm
சீன மயானத்தில் பாலியல் ரீதியில் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட ஜோடிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை
March 26, 2026, 12:12 pm
பெருநாள் பயண அலை: பட்ஜெட் ஹோட்டல்களின் தங்குமிட விகிதங்கள் அதிகரிப்பு
March 26, 2026, 12:11 pm
அம்பாங்கில் குப்பைத் தொட்டியிலிருந்து பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
March 26, 2026, 12:09 pm
தேசிய முன்னணியில் நீடிப்பதற்கான மஇகாவின் முடிவு தொலைநோக்குடையது: ஜம்ரி
March 26, 2026, 12:07 pm
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன
March 26, 2026, 12:05 pm
