செய்திகள் மலேசியா
மலாயாப் பல்கலைக்கழகத்தில் கோ. சாரங்கபாணி அறக்கட்டளை: டான்ஸ்ரீ குமரன்
கோலாலம்பூர்:
தமிழவேள் கோ. சா. அறவாரியத்தின் பெரு முயற்சியின் விளைவாக மலாயாப் பல்கலைக்கழகத்தில் கோ. சாரங்கபாணி அறக்கட்டளை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று கோ. சா அறவாரியத் தலைவர் டான்ஸ்ரீ குமரன் தெரிவித்துள்ளார்.
இந்த அறக்கட்டளைக்குரிய நிதி பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளது. 3 லட்சம் வெள்ளி மலாயா பல்கலைக்கழக கலைப்புல தலைவர் பேராசிரியர் டேனி வொங் அவர்களிடம் அக்டோபர் 14 ஆம் தேதி ஒப்படைக்கப்பட உள்ளது.
கலை அறிவியல் புலனத்தின் இந்திய ஆய்வியல் துறையின் கண்காணிப்பில் ஆய்வுப் பணிக்காக இந்த அறக்கட்டளை இருக்கும். இதன்வழி இந்தியர்களைப் பற்றிய ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் என்று இந்த அறக்கட்டளைக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த மேனாள் பேராசிரியர் கிருஷ்ணன் மணியம் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இலக்கு 5 அறக்கட்டளைகளை மலாயாப் பல்கலைக் கழகத்தில் அமைப்பதாகும். இதற்கான தொடர் முயற்சிகளில் கோ, சா அறவாரியம் இறங்கியுள்ளது, இதற்கு கரம் நீட்டி உதவி செய்யும் கொடை நெஞ்சர்களை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம், இறைவன் அருளால் அதனை விரைவில் நிறைவேற்றுவோம். அதன் முதல் படியாக இந்த துவக்கம் அமையும் என்று அறவாரியத் தலைவர் டான்ஸ்ரீ குமரன் நம்பிக்கையிடம் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 14 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கலைப்புலத்தின் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றும் டான்ஸ்ரீ குமரன் மேலும் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 7:00 pm
நாளை அம்பாங் பார்க்கில் எந்தக் கூட்டத்திற்கும் அனுமதி இல்லை; தடை விதிக்கப்படுகிறது: போலிஸ்
October 25, 2025, 3:02 pm
சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 25, 2025, 12:38 pm
அதிகமான பொய் மோசடிகள்: டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகங்களை மூடினார்
October 25, 2025, 12:25 pm
3 மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது
October 25, 2025, 11:44 am
பிரேசில், தென்னாப்பிரிக்க அதிபர்களை பிரதமர் இன்று சந்திக்கிறார்
October 25, 2025, 11:12 am
ஜோ லோ மீதான விசாரணை இன்னும் தீவிரமாக உள்ளது: ஐஜிபி
October 25, 2025, 10:51 am
வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உட்பட 8 பேர் மீட்கப்பட்டனர்
October 25, 2025, 10:14 am
காஜாங்கில் உள்ள கால்வாயில் 'ஜோசப்' என பச்சை குத்தப்பட்ட ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது
October 24, 2025, 10:57 pm
இவோன் பெனடிக்கின் ராஜினாமா கடிதத்தை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: பிரதமர்
October 24, 2025, 10:55 pm
