
செய்திகள் தமிழ் தொடர்புகள்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என தனபாலுக்கு தடை விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பழனிசாமிக்கு ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரரான தனபால், கோடநாடு சம்பவத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமியை தொடர்புபடுத்தி பேசியிருந்தார்.
விபத்தில் இறந்த கனகராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கக் கோரியும் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “அதிமுக பொதுச் செயலாளராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வரும் தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின்பேரில் தனபால் தனக்கு எதிராக பொய்யான, அவதூறான கருத்துகளை தெரிவித்து வருகிறார்,” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ரூ.1.10 கோடியை மானநஷ்ட ஈடாக வழங்கக் கோரியும் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், “அதிமுக பொதுச் செயலாளராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் பதவி வகித்து வரும் தனது நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின்பேரில் தனபால் தனக்கு எதிராக பொய்யான, அவதூறான கருத்துகளை தெரிவித்து வருகிறார்,” என்று கூறியிருந்தார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm