செய்திகள் இந்தியா
கல்வீச்சை தொடர்ந்து ரயில் மீது துப்பாக்கிச்சூடு
புவனேஸ்வரம்:
ஒடிஸாவில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். சில தோட்டாக்கள் ஜன்னல் கண்ணாடிகளை துளைத்து உள்ளே வந்தன. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களைக் குறிவைத்து கல்வீசுவது, தண்டாவளத்தில் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருள்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்வது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
தற்போது ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி ஆனந்த் விஹாருக்கு ஒடிஸாவின் புரி, பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9மணியளவில் புறப்பட்ட விரைவு ரயில் மீது புறப்பட்ட 5 நிமிஷங்களில் மர்ம நபர்கள் ரயிலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பயணிகள் பெரும் பீதியடைந்து கூச்சலிட்டனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 16, 2025, 8:38 pm
சபரிமலையில் தரமற்ற உணவு வினியோகம்: பம்பையில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை
December 16, 2025, 1:04 pm
மூடுபனி காரணமாக டெல்லி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து: பேருந்துகள், கார்கள் மோதிக்கொண்டதில் 4 பேர் பலி
December 15, 2025, 7:20 pm
சிறைக் கைதிகள் ரத்த சொந்தங்கள் மூலம் SIR படிவங்களை வழங்கலாம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
December 13, 2025, 1:20 pm
கேரள உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை; பாஜக கூட்டணி பின்னடைவு
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
