செய்திகள் இந்தியா
கல்வீச்சை தொடர்ந்து ரயில் மீது துப்பாக்கிச்சூடு
புவனேஸ்வரம்:
ஒடிஸாவில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினர். சில தோட்டாக்கள் ஜன்னல் கண்ணாடிகளை துளைத்து உள்ளே வந்தன. பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களைக் குறிவைத்து கல்வீசுவது, தண்டாவளத்தில் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட பொருள்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்வது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
தற்போது ரயில் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி ஆனந்த் விஹாருக்கு ஒடிஸாவின் புரி, பத்ராக் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9மணியளவில் புறப்பட்ட விரைவு ரயில் மீது புறப்பட்ட 5 நிமிஷங்களில் மர்ம நபர்கள் ரயிலை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பயணிகள் பெரும் பீதியடைந்து கூச்சலிட்டனர். ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயில் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
