
செய்திகள் இந்தியா
குஜராத்தில் முதல் தனியார் விமான ஆலை
வதோதரா:
குஜராத் மாநிலம் வதோதராவில் இந்தியாவின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையான டாடா ஆலை தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்திய விமானப் படைக்கு C295 விமானங்கள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன.
ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்துடன் சுமார் ரூ.21,000 கோடி மதிப்பீட்டில் 56 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன்படி 16 விமானங்களை உடனடியாகவும், 40 விமானங்களை ஏர்பஸ் -டாடா நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
அடுத்த 2 ஆண்டுகளில் இந்த விமானங்கள் உற்பத்தி முடிவடைந்து வெளியாகும் என்று ஸ்பெயின் பிரதமர் தெரிவித்தார்.
c295 போர் விமானம் என்பது ஒரு நடுத்தர ராணுவப் போக்குவரத்து விமானமாகும்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:06 pm
சண்டிகரில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருகிறது
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am