செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர்விடுமுறையில் விதிகளை மீறி இயங்கிய பேருந்துகள் பறிமுதல்
ஓசூர்:
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர்விடுமுறை காரணமாக பெங்களூருவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 10-ம் தேதி முதல் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
இந்நிலையில், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், தமிழக எல்லையான ஜுஜுவாடி முதல் ஓசூர் பேருந்து நிலையம் வரை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், 18 ஆம்னி பேருந்துகளில் உரிய ஆவணங்கள் இல்லாததும், பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, பேருந்துகளைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், ரூ.2.37 லட்சம் அபராதம், ரூ.27 லட்சம் வரி விதித்தனர். மேலும், பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக 71 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.2.17 லட்சம் அபராதம், ரூ.9.71 லட்சம் வரி விதிக்கப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2024, 5:44 pm
தீபாவளிக்கான இலவச அரிசி, சர்க்கரை அக்.21-இல் ரேஷனில் வழங்கப்படும்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
October 15, 2024, 4:06 pm
சென்னையில் கனமழை: 5 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன
October 13, 2024, 5:00 pm
கொட்டி தீர்த்த மழையால் நிலைகுத்தியது மதுரை
October 12, 2024, 7:08 am
சென்னை அருகே பயங்கர ரயில் விபத்து
October 11, 2024, 11:22 pm
விமானத்தில் கோளாறு: 2 மணி நேரம் திருச்சி வான்வெளியில் பறந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது
October 11, 2024, 12:52 pm