செய்திகள் தமிழ் தொடர்புகள்
திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு மலேசியாவில் இருந்து தாயகம் திரும்பிய பெண் நடுவானில் உயிரிழப்பு
சென்னை:
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற பெண் உடல் நலக்குறைவால் தாயகம் திரும்பிய போது நடுவானில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராசாத்தி என்பவர் மலேசியாவில் துப்புறவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
அங்கு அவருக்கு திடீரென நுரையீரல் பாதிக்கப்பட்டு நோய் தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து நேற்று மலேசியா விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போதே ராசாத்திக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு விமானத்தின் இருக்கையில் அமர்ந்தபடியே உயிரிழந்துள்ளார்.
ஏற்கெனவே தந்தை உயிரிழந்த நிலையில், தற்போது தாயும் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததால் ஆதரவின்றி நிற்கும் 4ஆம் வகுப்பு பள்ளி மாணவிக்கு மாவட்ட நிர்வாகம் உதவிட கோரிக்கையும் எழுந்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 28, 2026, 11:59 am
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் காஜா முயீனுத்தீன் வலியுறுத்தல்
January 28, 2026, 9:10 am
“திருச்சியை 2-ஆவது தலைநகராக அறிவிக்க வேண்டும்”: கனிமொழியிடம் அமைச்சர்கள் மனு
January 23, 2026, 10:53 pm
மோடி மேடையில் ‘மாம்பழம்’ சின்னமா?: ராமதாஸ் கோபம்
January 22, 2026, 6:43 pm
வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
January 21, 2026, 9:04 pm
"என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன்”: இபிஎஸ்
January 19, 2026, 10:13 pm
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30ஆம் தேதி வரை அவகாசம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவு
January 18, 2026, 11:12 pm
நாளை சிபிஐ அலுவலகத்தில் 2ஆம் கட்ட விசாரணைக்கு ஆஜராக டெல்லி புறப்பட்டார் விஜய்
January 16, 2026, 4:24 pm
