நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை அருகே பயங்கர ரயில் விபத்து

சென்னை:  

சென்னை, கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள  கவரைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை இரவு நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது விரைவு ரயில் மோதியது.

இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம்புரண்டது. ரயில் பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்று விழுந்ததில் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த ரயிலில் சென்ற பயணிகள் தொடர்பாக தகவல் விவரம் அறியும் விதமாக, உதவி எண்ணை( 044-25354151, 044-2435499) ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பிகார் மாநிலம் தர்பங்காவுக்கு சென்ற விரைவு ரயில் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் சென்றபோது நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியது.

இதில், அந்த ரயிலில் 12 பெட்டிகள் வரை தடம்புரண்டதாக தெரிகிறது.

ரயில்வே அதிகாரிகள், திருவள்ளூர் மாவட்ட அரசு அதிகாரிகள், ரயில்வே போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தடம்புரண்ட பெட்டிகளில் இருந்து காயமடைந்த பயணிகளை மீட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset