
செய்திகள் விளையாட்டு
பிளேக்பர்ன் இளம் வீரரை கடித்த கால்பந்து வீரருக்கு 8 ஆட்டங்கள் தடை
லண்டன்:
பிளேக்பர்ன் இளம் வீரரை கடித்த பிரஸ்டன் நோர்ட் எண்ட் கால்பந்து அணி வீரருக்கு 8 ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற இங்கிலாந்து லீக் ஆட்டத்தில் பிளாக்பர்ன் அணியினர் பிரஸ்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இவ்வாட்டத்தின் போது பிளாக்பர்ன் அணி வீரர் ஓவன் பெக்கை, பிரஸ்டன் அணி வீரர் மிலுடின் ஒஸ்மாஜிக் கழுத்தில் கடித்தார்.
இருந்தாலும் ஒஸ்மாஜிக் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை.
ஆனால், அவர் இப்போது கால்பந்து சங்கத்தால் கடுமையாக தண்டிக்கப்பட்டார்.
25 வயதான அவர் எட்டு ஆட்டங்களைத் தவறவிடுவார்.
மேலும் வன்முறை நடத்தையை ஒப்புக்கொண்ட பிறகு 15,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
87ஆவது நிமிடத்தில் எதிராளியைக் கடித்ததன் மூலம் வன்முறைச் செயலைச் செய்ததாக முன்கள வீரர் ஒப்புக்கொண்டார்.
ஒரு சுயாதீன ஒழுங்குமுறை ஆணையம் விசாரணையைத் தொடர்ந்து அவரது தடைகளை விதித்தது.
அதன் எழுத்துப்பூர்வ காரணங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் இங்கிலாந்து கால்பந்து சங்கம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 10:57 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: ஜேடிதி அணியினர் தோல்வி
September 17, 2025, 10:56 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am