நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிளேக்பர்ன் இளம் வீரரை கடித்த கால்பந்து வீரருக்கு 8 ஆட்டங்கள் தடை

லண்டன்:

பிளேக்பர்ன் இளம் வீரரை கடித்த பிரஸ்டன் நோர்ட் எண்ட் கால்பந்து அணி வீரருக்கு 8 ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடைபெற்ற இங்கிலாந்து லீக் ஆட்டத்தில் பிளாக்பர்ன் அணியினர் பிரஸ்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இவ்வாட்டத்தின் போது பிளாக்பர்ன் அணி வீரர் ஓவன் பெக்கை, பிரஸ்டன் அணி வீரர்  மிலுடின் ஒஸ்மாஜிக் கழுத்தில் கடித்தார்.

இருந்தாலும் ஒஸ்மாஜிக் ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

ஆனால், அவர் இப்போது கால்பந்து சங்கத்தால் கடுமையாக தண்டிக்கப்பட்டார்.

25 வயதான அவர் எட்டு ஆட்டங்களைத் தவறவிடுவார்.

மேலும் வன்முறை நடத்தையை ஒப்புக்கொண்ட பிறகு 15,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

87ஆவது நிமிடத்தில் எதிராளியைக் கடித்ததன் மூலம் வன்முறைச் செயலைச் செய்ததாக முன்கள வீரர் ஒப்புக்கொண்டார். 

ஒரு சுயாதீன ஒழுங்குமுறை ஆணையம் விசாரணையைத் தொடர்ந்து அவரது தடைகளை விதித்தது. 

அதன் எழுத்துப்பூர்வ காரணங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் இங்கிலாந்து கால்பந்து சங்கம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset