
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்செந்தூர் கோயில் உண்டியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஒரு ரூபாய் நாணய மாலை
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வசந்த மண்டபத்தில், கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் எண்ணப்பட்டது.
உண்டியல்கள் எண்ணும் பணியில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக் குழுவினரும் கோயில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், ரூ.5,15,89,834 ரொக்கப் பணம், 2,352 கிராம் தங்கம், 41,998 கிராம் வெள்ளி, 61,600 கிராம் பித்தளை, 5,129 கிராம் செம்பு, 13,739 கிராம் தகரம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1,589 என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
வழக்கைத்தைவிட உண்டியலில் 1 ரூபாய் நாணயங்களால் கோர்க்கப்பட்ட நாணய மாலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியிருந்தார். இந்த ஒரு ரூபாய் நாணய மாலையை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 5:53 pm
தூத்துக்குடியில் மிதவை கப்பலின் டேங்கை சுத்தம் செய்த 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு
September 17, 2025, 4:04 pm
பெரியார் பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
September 15, 2025, 12:26 pm
வட சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கனமழை
September 13, 2025, 2:27 pm
விஜய் வருகையால் அதிர்ந்த திருச்சி: மரக்கடை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
September 13, 2025, 7:32 am
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
September 12, 2025, 9:08 pm
நேபாளத்தில் சிக்கிய 116 தமிழர்கள் மீட்பு; எஞ்சியோரை அழைத்துவர நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் தகவல்
September 11, 2025, 10:54 pm
ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெறும்: சீமான்
September 10, 2025, 1:43 pm