செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்செந்தூர் கோயில் உண்டியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய ஒரு ரூபாய் நாணய மாலை
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. அதன்படி உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோயில் வசந்த மண்டபத்தில், கோயில் தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் எண்ணப்பட்டது.
உண்டியல்கள் எண்ணும் பணியில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரப் பணிக்குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப் பணிக் குழுவினரும் கோயில் பணியாளர்களும் ஈடுபட்டனர்.
இந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில், ரூ.5,15,89,834 ரொக்கப் பணம், 2,352 கிராம் தங்கம், 41,998 கிராம் வெள்ளி, 61,600 கிராம் பித்தளை, 5,129 கிராம் செம்பு, 13,739 கிராம் தகரம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 1,589 என பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
வழக்கைத்தைவிட உண்டியலில் 1 ரூபாய் நாணயங்களால் கோர்க்கப்பட்ட நாணய மாலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியிருந்தார். இந்த ஒரு ரூபாய் நாணய மாலையை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 4, 2025, 5:04 pm
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
