செய்திகள் தமிழ் தொடர்புகள்
கொட்டும் மழையில் சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டம்
சென்னை:
தமிழகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. பட்டாசு வெடித்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும் புத்தாண்டைக் கொண்டாடினர். கொட்டும் மழையில் மெரினா கடற்கரையில் மக்கள் கூடி நின்றனர்.
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நேற்று இரவு 12 மணிக்கு பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைத் தெரிவித்தும் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதையொட்டி, மாநிலம் முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், இரவு முழுவதும் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
சென்னையில் மட்டும் 19,000 போலீஸார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, தியாகராயநகர் உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் 425 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்றது.
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருசக்கர வாகனப் பந்தயங்களைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரைப் பகுதிகளிலும் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கிய இடங்கள் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன.
அரசால் அனுமதிக்கப்பட்ட மனமகிழ் மன்றங்கள், ஓட்டல்கள், விடுதிகளுடன் கூடிய நட்சத்திர ஓட்டல்கள் ஆகிய இடங்களில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இரவு நேரத்தில் அனைத்து மேம்பாலங்களும் மூடப்பட்டன. வணிக வளாகங்கள், ஓட்டல்கள், இனிப்பகங்கள், துணிக்கடைகளில் அதிக அளவில் மக்கள் திரண்டனர். பொதுமக்களைக் கவரும் வகையில் பல்வேறு இடங்களும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 10:37 pm
காரைக்குடியில் சைக்கிள் ஓட்டி பிரச்சாரம் செய்த விஜய்: காலையிலிருந்து காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
April 8, 2026, 10:40 pm
புதுச்சேரியில் நாளை 9ஆம் தேதி காலை 7.00 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது
April 8, 2026, 12:50 pm
தேர்தல் கண்காணிப்பு தீவிரம்: ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.53.57 லட்சம் பறிமுதல்
April 7, 2026, 8:03 pm
தமிழக சட்டசபை தேர்தலை ஒட்டி டாஸ்மாக் கடைகள் 4 நாட்கள் மூடப்படும்
April 7, 2026, 3:53 pm
