நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

எனது கவனத்திற்கு கொண்டு வராமலேயே விவாகரத்தை அறிவித்தார் ஜெயம் ரவி: ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி பகிரங்க குற்றச்சாட்டு 

சென்னை:

நடிகர் ஜெயம் ரவி தன் மனைவி ஆர்த்தியிடமிருந்து  விவாகரத்து கோரியிருக்கும் நிலையில் அவரின் மனைவி ஆர்த்தி ரவி ஜெயம் ரவிக்கு எதிராக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். 

கடந்த 18 வருடங்களாக இருந்த எங்களின் திருமண பந்தம் ஜெயம் ரவியின் ஓர் அறிக்கையில் தாம் வாழ்ந்த வாழ்க்கையின் அதற்குரிய கௌரவம், கண்ணியம், மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக உணர்கிறேன் என்று ஆர்த்தி ரவி கூறினார். 

தாம் பலமுறை அவரிடம் பேச முயற்சி மேற்கொண்டும் அதில் எந்தவொரு பலனும் கிட்டவில்லை. இதனால் தாம் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் தெரிவித்தார். 

எங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிருத்தி அவர்களை பாதுகாக்கும் ஒரு தாயாக தாம் இருப்பதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தாம் புறக்கணிப்பதாகவும் ஆர்த்தி ரவி சொன்னார். 

நானும் எனது இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்து கொண்டிருக்கிறோம். நடிகர் ஜெயம் ரவி எடுத்த விவாகரத்து முடிவு குடும்ப நலனுக்காக எடுத்தது அல்ல என்று ஆர்த்தி ரவி தீர்க்கமாக குறிப்பிட்டார்

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset