நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சர்ச்சைக்குரிய மதபோதகர் மகாவிஷ்ணு கைது 

சென்னை:

மாற்றுத்திறனாளிகளை அவமதித்தாக கைது செய்யப்பட்ட சிறையில் உள்ள மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகா், சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூரைச் சோ்ந்த பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனரும் ஹிந்து மத சொற்பொழிவாளருமான மகாவிஷ்ணு பேசியது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் அவரைக் கைது செய்தனா்.

இந்நிலையில் திருவொற்றியூா் பட்டினத்தாா் கோயில் தெருவைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் தலைவா் சரவணன் என்பவா் திருவொற்றியூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் திருவொற்றியூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கைதான மகாவிஷ்ணுவை செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

நகைச்சுவை என்ற பெயரில் பலரது மனம் புண்படும்படி தொடர்ந்து பேசி வருவதாக அந்த சர்ச்சைக்குரிய மத போதகர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது  

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset