செய்திகள் மலேசியா
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தால் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளேன்: துன் மகாதீர்
கோலாலம்பூர் -
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதை அறிந்து தாம் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளதாக முன்னாள் துன் மகாதீர் முஹம்மத் கூறினார்.
இஸ்ரேல்,ஒரு நயவஞ்சகமான நாடு என்பதும் உண்மையான பயங்கரவாதிகள் அங்குதான் உள்ளனர் என்பதையும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இஸ்மாயில் மென்மையாகப் பேசக்கூடியவர்தான் ஆனால் சிங்கத்தைப் போன்ற இதயம் கொண்டவர். இறைவன் அவருக்கு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்க நான் பிரார்த்திக்கிறேன் என்று மகாதீர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன விடுதலைக்காக போராடுவதில் இஸ்மாயிலின் இடைவிடாத முயற்சிகள் ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரரும் பின்பற்ற வேண்டிய ஒன்று என்று துன் மகாதீர் கூறினார்.
அதே வேளையில் இஸ்ரேல் ஒரு முரட்டு இனப்படுகொலையை செய்துவரும் நாடு என்று வர்ணித்த மகாதீர், இஸ்மாயிலுக்கு நடந்தது சியோனிச ஆட்சியின் ஆணவத்தையும் கொடுமையையும் காட்டுகிறது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 9:20 pm
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றபோது விபத்து: போக்குவரத்து போலிஸ் அதிகாரி காயம்
October 26, 2025, 3:40 pm
பள்ளிகளில் மதுபானத்தை இயல்பாக்குவது மலேசிய சமூக விழுமியங்களுக்கு முரணானது: ஆண்ட்ரூ டேவிட்
October 26, 2025, 2:25 pm
அம்பாங் பார்க்கில் தடுக்கப்பட்ட டிரம்ப்புக்கு எதிரான போராட்டங்கள் டத்தாரான் மெர்டேகாவில் எதிரொலித்தன
October 26, 2025, 1:19 pm
மலேசியர்கள் திமோர் லெஸ்தேவில் தடையற்ற டேட்டா ரோமிங் சேவையை பெறுவார்கள்
October 26, 2025, 11:27 am
