செய்திகள் மலேசியா
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தால் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளேன்: துன் மகாதீர்
கோலாலம்பூர் -
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதை அறிந்து தாம் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளதாக முன்னாள் துன் மகாதீர் முஹம்மத் கூறினார்.
இஸ்ரேல்,ஒரு நயவஞ்சகமான நாடு என்பதும் உண்மையான பயங்கரவாதிகள் அங்குதான் உள்ளனர் என்பதையும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இஸ்மாயில் மென்மையாகப் பேசக்கூடியவர்தான் ஆனால் சிங்கத்தைப் போன்ற இதயம் கொண்டவர். இறைவன் அவருக்கு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்க நான் பிரார்த்திக்கிறேன் என்று மகாதீர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன விடுதலைக்காக போராடுவதில் இஸ்மாயிலின் இடைவிடாத முயற்சிகள் ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரரும் பின்பற்ற வேண்டிய ஒன்று என்று துன் மகாதீர் கூறினார்.
அதே வேளையில் இஸ்ரேல் ஒரு முரட்டு இனப்படுகொலையை செய்துவரும் நாடு என்று வர்ணித்த மகாதீர், இஸ்மாயிலுக்கு நடந்தது சியோனிச ஆட்சியின் ஆணவத்தையும் கொடுமையையும் காட்டுகிறது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 21, 2025, 6:20 pm
சந்தேகத்திற்குரியவர்களின் கைத்தொலைபேசிகள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படும்: ஐஜிபி
January 21, 2025, 6:16 pm
பெருநாள் காலத்தில் பி40, எம்40 பிரிவினருக்கு மட்டும் இலவச டோல் கட்டணச் சேவை வழங்கப்படலாம்: ஃபோம்கா
January 21, 2025, 6:01 pm
1 எம்டிபி மலேசியாவிற்கு நன்மை பயக்கும்: நஜிப்
January 21, 2025, 5:43 pm
மொக்ஸானி, மிர்சானின் சொத்து அறிவிப்பில் எம்ஏசிசி திருப்தியடைந்துள்ளது: அஸாம் பாக்கி
January 21, 2025, 5:41 pm
என் வழக்கு மதம் பற்றி அல்ல, உறவு சார்ந்தது என்பதை குறிப்பிட்ட தலைமை நீதிபதிக்கு நன்றி: இந்திரா காந்தி
January 21, 2025, 4:58 pm
தண்ணீர் பயன்பாட்டு வரம்புகள் குறித்த விதிமுறைகளை அரசாங்க நிறுவ வேண்டும்: ஸ்பான்
January 21, 2025, 4:33 pm
கிள்ளானில் நிகழ்ந்த ரசாயன தொழிற்சாலை வெடிப்பு சம்பவத்தில் 32 பேர் காயமடைந்தனர்: போலிஸ்
January 21, 2025, 4:10 pm