
செய்திகள் மலேசியா
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தால் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளேன்: துன் மகாதீர்
கோலாலம்பூர் -
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதை அறிந்து தாம் வருத்தமும் கோபமும் அடைந்துள்ளதாக முன்னாள் துன் மகாதீர் முஹம்மத் கூறினார்.
இஸ்ரேல்,ஒரு நயவஞ்சகமான நாடு என்பதும் உண்மையான பயங்கரவாதிகள் அங்குதான் உள்ளனர் என்பதையும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இஸ்மாயில் மென்மையாகப் பேசக்கூடியவர்தான் ஆனால் சிங்கத்தைப் போன்ற இதயம் கொண்டவர். இறைவன் அவருக்கு உயர்ந்த சுவர்க்கத்தை வழங்க நான் பிரார்த்திக்கிறேன் என்று மகாதீர் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீன விடுதலைக்காக போராடுவதில் இஸ்மாயிலின் இடைவிடாத முயற்சிகள் ஒவ்வொரு சுதந்திர போராட்ட வீரரும் பின்பற்ற வேண்டிய ஒன்று என்று துன் மகாதீர் கூறினார்.
அதே வேளையில் இஸ்ரேல் ஒரு முரட்டு இனப்படுகொலையை செய்துவரும் நாடு என்று வர்ணித்த மகாதீர், இஸ்மாயிலுக்கு நடந்தது சியோனிச ஆட்சியின் ஆணவத்தையும் கொடுமையையும் காட்டுகிறது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm