செய்திகள் மலேசியா
தின்பண்டத்தில் எலி மருந்து: ஆடவருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
கூலிம்:
எலி மருந்து கலந்து தின்பண்டத்தை இரு சிறார்கள் உண்டச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஓர் ஆடவர் இன்று தொடங்கி ஆறு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறார் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியது தொடர்பில் 611வது சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 284வது பிரிவின் கீழ் அவ்வாடரைத் தடுத்து வைப்பதற்கான அனுமதியை கூலிம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மிர்ஸா முஹம்மத் வழங்கினார்.
அந்த ஆடவர் இன்று காலை 8.00 மணியளவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கூலிம் லாபு பெசார், கம்போங் பாடாங் உபியிலுள்ள தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த எலி விஷம் தடவப்பட்ட திண்பண்டத்தை உட்கொண்ட இரு சிறார்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மூன்று வயதான Muhammad Akil Syauqi Nur Sufian-னும் அவனது இரண்டு வயது தம்பி Muhammad Luth ஆகிய இருவரும் அத்தோட்டத்தின் வேலியில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்து தடவப்பட்ட திண்பண்டத்தை உண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவ்விரு சிறார்களும் சிகிச்சைக்காகப் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் Muhammad Akil Syauqi Nur Sufian சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.40 மணியளவில் உயிரிழந்தார்.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் அவரின் தம்பிக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 31, 2026, 9:55 pm
மஇகாவின் உயர் கல்வி லட்சிய பயணம்; மாணவர்களுக்கு வழிகாட்ட 8 மாநிலங்களில் நடைபெறும்: சதீஸ் குமார்
March 31, 2026, 9:06 pm
குடிபோதையில் இருந்த கார் ஓட்டுநர் மோதியதில் குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்: போலிஸ்
March 31, 2026, 9:05 pm
ஊடகவியலாளர் கைது தேவையற்றது: ராம் கர்ப்பால் சிங்
March 31, 2026, 9:04 pm
நகரத்தார் பழக்க வழக்கங்களுக்கான வழிமுறைகள் நூல் வெளியீட்டு விழா: விமரிசையாக நடைபெற்றது
March 31, 2026, 5:36 pm
ஏப்ரல் மாதத்திற்குள் அதிகரிக்கப்பட்ட 300 ரிங்கிட் டீசல் மானியத்தை அரசாங்கம் வழங்கும்
March 31, 2026, 5:16 pm
கே.எல்.சி.சி.யில் 'புகைப்பட புழுக்கள்' என நம்பப்படும் 25 நபர்கள் கைது
March 31, 2026, 4:46 pm
