செய்திகள் மலேசியா
தின்பண்டத்தில் எலி மருந்து: ஆடவருக்கு 6 நாள் தடுப்புக் காவல்
கூலிம்:
எலி மருந்து கலந்து தின்பண்டத்தை இரு சிறார்கள் உண்டச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஓர் ஆடவர் இன்று தொடங்கி ஆறு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறார் பாதுகாப்பை அலட்சியப்படுத்தியது தொடர்பில் 611வது சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 284வது பிரிவின் கீழ் அவ்வாடரைத் தடுத்து வைப்பதற்கான அனுமதியை கூலிம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மிர்ஸா முஹம்மத் வழங்கினார்.
அந்த ஆடவர் இன்று காலை 8.00 மணியளவில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கூலிம் லாபு பெசார், கம்போங் பாடாங் உபியிலுள்ள தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த எலி விஷம் தடவப்பட்ட திண்பண்டத்தை உட்கொண்ட இரு சிறார்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
மூன்று வயதான Muhammad Akil Syauqi Nur Sufian-னும் அவனது இரண்டு வயது தம்பி Muhammad Luth ஆகிய இருவரும் அத்தோட்டத்தின் வேலியில் வைக்கப்பட்டிருந்த எலி மருந்து தடவப்பட்ட திண்பண்டத்தை உண்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
அவ்விரு சிறார்களும் சிகிச்சைக்காகப் பினாங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் Muhammad Akil Syauqi Nur Sufian சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.40 மணியளவில் உயிரிழந்தார்.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வரும் அவரின் தம்பிக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
2026 புத்தாண்டு கொண்டாட்டங்களை பிரதமர் மேலும் உற்சாகப்படுத்தினார்
January 1, 2026, 1:16 am
2026 புத்தாண்டை அர்த்தமுள்ள சாத்தியமானதாக மாறுவோம்: டத்தோ சரவணக்குமார்
December 31, 2025, 5:52 pm
நாளை விடுமுறை: பெர்லிஸ் மாநில அரசு அறிவிப்பு
December 31, 2025, 5:33 pm
2026ஆம் ஆண்டுக்கான தைப்பூசம், கூட்டரசுப் பிரதேச தினத்திற்கு கூடுதல் விடுமுறை
December 31, 2025, 5:26 pm
கஞ்சா போதையில் கார் ஓட்டியவரால் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழப்பு
December 31, 2025, 5:17 pm
பகடிவதைக்கு உள்ளான சிறுவனின் காணொலியைப் பார்த்து மனமுடைந்த பெண்
December 31, 2025, 4:51 pm
