நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இசை ரசிகர்களைச் சந்திக்க இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜூலை 8-ஆம் தேதி மலேசியா வருகின்றார்

கோலாலம்பூர்:

இசை ரசிகர்களைச் சந்திக்க இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஜூலை 8-ஆம் தேதி மலேசியா வருகின்றார்.

ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் பங்கேற்கும் உலகத் தரம் வாய்ந்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஜூலை 27-ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அவரின் வருகை அமைகின்றது.

இந்தச் சந்திப்பில் ஊடகவியலாளர்களும் இசை ரசிகர்களும் கலந்து கொள்வார்கள் என்று ஏற்பாட்டுக் குழுவான ஸ்டார் பிளானெட் உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்தச் சந்திப்பு நடக்கும் இடம் குறித்தத் தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஸ்டார் பிளானெட்  தெரிவித்துள்ளது. 

கலைப் பார்வையைக் குறைபாடற்ற முறையில் செயல்படுத்துவதை உறுதி செய்து பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset