நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்; கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்: விஜய் உத்தரவு

சென்னை:

எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். அதற்கு பதிலாக கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்.

நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ளார். 

இதற்காக இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 

அவ்வப்போது சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகிறார். 

இந்தநிலையில் நடிகர் விஜய்யின் 50ஆவது பிறந்தநாள்  நாளை கொண்டாடப்படவுள்ளது. 

அரசியல் கட்சி ஆரம்பித்த பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள், அவரது கட்சி தொண்டர்கள் கொண்டாட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணிகளுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர். 

இந்த நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என தொண்டர்களுக்கு நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதவில், 

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்குத் தலைவர் விஜய்  அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து,

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெறுவோரின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நேரடியாகச் சென்று உடனே வழங்கிட அனைத்து தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகளுக்கும் தளபதி விஜய்  உத்தரவிட்டுள்ளார். 

எனவே தலைவரின் உத்தரவின்படி, கழக நிர்வாகிகள், கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி, அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை உடனடியாகச் செய்ய வேண்டும்  என  ஆனந்த்  கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset