செய்திகள் தமிழ் தொடர்புகள்
சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் வசூலித்தீர்கள்; எவ்வளவு செலவழித்தீர்கள்? விவரங்கள் உண்டா? சுரண்டலில் ஈடுபட்டுள்ள சுங்கச்சாவடிகளின் புதிய கட்டண உயர்விற்கு கண்டனம்: எம் எச் ஜவாஹிருல்லா
பாபநாசம்:
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டண உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது. இதற்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது அதன் வாயிலாகச் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்கிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளிப்படைத் தன்மையோடு அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி பலமுறை கோரிக்கை வைத்துள்ளது. ஃபாஸ்ட் டாக் என்ற பெயரில் வசூலிக்கப்படும் முன் தொகை வாயிலாகப் பெருமளவில் பொருளாதாரம் வாகன உரிமையாளர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட இருக்கிறது.
இந்தக் கட்டண உயர்வின் வாயிலாகப் பேருந்து கட்டண உயர்வு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படுவதோடு விலைவாசிகளின் உயர்வும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரந்தூர் சுங்கச் சாவடியில் கூடுதலாக ரூபாய் 28 கோடி வசூல் செய்தது என இந்தியத் தலைமை கணக்காயர் அறிக்கை அளித்ததும் கவனிக்கத்தக்கது
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் என்எச்ஏஐ எனும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாகச் சுங்க கட்டண உயர்வினைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்க நேரிடும் என்று பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 4:30 pm
முதல்வர் ஸ்டாலின் உடன் திருமாவளவன் சந்திப்பு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
September 15, 2024, 10:18 pm
உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்
September 14, 2024, 4:26 pm
வக்பு வாரிய சட்ட மசோதாவிற்கு நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் திருமாவளவன் ஆட்சேபனை
September 14, 2024, 8:42 am
‘ஆட்சியில் உள்ளவர்களிடம் கோரிக்கை வைத்தால் அவமானப்படுத்தப்படுகின்றனர்’: நிர்மலா சீதாராமனுக்கு ராகுல் கண்டனம்
September 12, 2024, 9:40 pm
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தோழர் சீதாராம் எச்சூரி மறைவு: ஜவாஹிருல்லா இரங்கல்
September 12, 2024, 4:49 pm
வயநாடு நிலச்சரிவால் களையிழந்த ஓணம் பண்டிகை: தமிழக பூ விவசாயிகள் வேதனை
September 12, 2024, 3:02 pm
மிலாது நபி தொடர் விடுமுறை: 1,515 சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழக போக்குவரத்துத்துறை ஏற்பாடு
September 12, 2024, 1:12 pm