செய்திகள் இந்தியா
மேற்குவங்கத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது: உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது
கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் கஞ்சன்சங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 60 பேர் மோசமான காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிர்ப்பலி மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்துப் பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிட முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது.
பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3-ல் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளது.
இதற்கிடையில் சரக்கு ரயிலுக்கு சரியான சிக்னலை சரியாக கவனிக்காமல் முன்னேறியதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:03 pm
மம்தா அளித்த உறுதிமொழி: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட கொல்கத்தா மருத்துவர்கள்
October 22, 2024, 8:09 am
ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை தாக்கியவர் வீட்டை புல்டோசர் மூலம் இடித்த ராஜஸ்தான் அரசு
October 22, 2024, 7:58 am
தில்லியில் மர்மப் பொருள் வெடிப்பு: உச்சகட்ட பாதுகாப்பு
October 22, 2024, 7:54 am
பத்மநாப சுவாமி கோயில் வெண்கலப் பாத்திரம் திருட்டு: தெரியாமல் எடுத்ததாக மருத்துவரை விடுவித்த கேரள போலிஸ்
October 22, 2024, 6:52 am
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி
October 19, 2024, 5:53 pm
1 கோடி ரூபாயை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய்
October 19, 2024, 3:37 pm
பன்னுவை கொலை செய்யும் முயற்சியில் ரா அதிகாரிக்கு தொடர்பு: அமெரிக்கா குற்றச்சாட்டு
October 18, 2024, 7:12 pm
விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தடுக்க கடும் சட்டம்
October 18, 2024, 3:36 pm
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலத்தை 60 நாள்களாகிறது
October 18, 2024, 9:05 am