நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் 39 இடங்களில் திமுக முன்னிலை தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்: தொண்டர்களை சந்திக்கிறார் முக ஸ்டாலின்

சென்னை:

இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதல் கடந்த 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. 

மொத்தமுள்ள 96 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 64 கோடி பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளனர்.

நாடு முழுவதும் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் திமுக 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

டிஆர் பாலு, கனிமொழி, ஆர். ராசா, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், ஜெகத்ரட்சகன் உட்பட 39 பேர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.

திமுக கூட்டணியின் இந்த முன்னிலையை அதன் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு தொண்டர்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவாலயத்தில் சந்திக்கவுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset