நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றிப்பெறும்: கருத்து கணிப்பில் தகவல் 

சென்னை: 

இந்தியாவின் பாராளுமன்ற தேர்தல் முடிவு எதிர்வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு இந்திய அரசியலில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. 

தமிழகத்தைப் பொருத்தவரை, திமுக கூட்டணி 33 முதல் 37 இடங்களைக் கைப்பற்றும் என்றும் அதிமுக 6 யிலிருந்து 8 இடங்களைக் கைப்பற்றும் என்றும் இதர கட்சிகள் 1 அல்லது 2 இடங்க்களை மட்டுமே வெல்லும் என்று சொல்லப்படுகிறது. 

தமிழகத்தில் நான்கு முனை போட்டியில் பாராளுமன்ற தேர்தல் எதிர்கொள்ளப்பட்டது. திமுக, அதிமுக, நாதக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் முறையே கூட்டணியை அமைத்து தேர்தல் களத்தைச் சந்தித்தன. 

பிரதான செய்தி ஊடகங்களான NEWS 18, INDIA TODAY , ABP C VOTER ஆகியவை நடத்திய கருத்து கணிப்பில் திமுக கூட்டணியே வெற்றிப்பெறும் என்று சொல்லப்படுகிறது

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset