நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மலேசியாவிலிருந்து திருச்சிக்கு மின் சிகரெட்டுகள் கடத்தல்: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

திருச்சி:

மலேசியாவில் இருந்து விமானத்தில் மின் சிகரெட்டுகள் கடத்தி வந்த பயணிகளிடம் இருந்து 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான 1,285 சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதேபோல், உள்நாட்டு விமானங்களும் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு மின் சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில், கோலாலம்பூரிலிருந்து மலிண்டோ விமானத்தில் திருச்சி வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்து வந்த இரண்டு பயணிகளை சோதனை செய்த போது அவர்கள் உடமையில் தடை செய்யப்பட்ட 1,285 மின் சிகரெட்டுகள்  இருந்துள்ளது.

அதன் மதிப்பு ரூ.32 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த சிகரெட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அதோடு, மின் சிகரெட்டுகளை கடத்தி வந்த அந்த இரண்டு நபர்களிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவம் திருச்சி விமான நிலைய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset