நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மடிக்கணினிக்கு சார்ஜ் செய்யும்போது மின்சாரம் பாய்ந்து பயிற்சி மருத்துவர் மரணம்

சென்னை: 

மடிக்கணினிக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்ததில் பயிற்சி பெண் மருத்துவர் உயிர்இழந்தார். இச்சம்பவம் அயனாவரத்தில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில்கூறப்படுவதாவது: நாமக்கல்மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் சரனிதா (32). இவர் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார்.இவரது கணவர்உதயகுமார் கோயம்புத்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில்மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை உள்ளது.
 
சரனிதா, சென்னை அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி ஒன்றில் அறையெடுத்து தங்கி படித்து வந்தார். இந்நிலையில், கணவர் உதயகுமார் நேற்று முன்தினம் போனில் பலமுறை தொடர்புகொண்டும் சரனிதா போனை எடுத்துப் பேசவில்லை.

இதனால், சந்தேகம் அடைந்த கணவர், இதுகுறித்து மனைவி தங்கியுள்ள விடுதியின் போனுக்கு அழைத்துப்பேசி, மனைவி குறித்து கேட்டுள்ளார்.

இதையடுத்து, விடுதி ஊழியர்கள் சரனிதா தங்கியிருந்த அறை சென்று பார்த்தபோது அங்கு மடிக்கணினி சார்ஜர் ஒயரை பிடித்தபடி, சரனிதா கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், மடிக்கணினிக்கு சார்ஜ் போடும்போது, மின்சாரம் பாய்ந்ததில் சரனிதா உயிரிழந்தது தெரியவந்தது.

இதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதா அல்லது இறப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக மனைவி இறப்பு குறித்து அவரதுகணவர் உதயகுமாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset