செய்திகள் தமிழ் தொடர்புகள்
உலகப் பட்டினி தினமான மே 28-இல் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யுங்கள்: தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்
சென்னை:
உலகப் பட்டினி தினமான மே 28-இல் தமிழகம் முழுவதும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி, பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும், அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலகப் பட்டினி தினமான, வருகிற 28.05.2024 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மாவட்ட, அணி, நகரம், ஒன்றியம், கிளை, மற்றும் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2024, 5:31 pm
மலேசியாவிலிருந்து சென்னை திரும்பிய இளையர் உட்பட 4 பேர் விபத்தில் பலி
September 1, 2024, 12:04 pm
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
August 30, 2024, 8:48 am
சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க 4 இடங்களில் போலிசார் அனுமதி
August 29, 2024, 11:11 am
அமெரிக்காவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
August 28, 2024, 12:41 pm
சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது புருணை ஏர்லைன்ஸ்
August 26, 2024, 4:13 pm