செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் ஜூன் மாதம் 6-ஆம் தேதி பள்ளிகளை திறக்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 6-ஆம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன.
வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறந்து அன்றைய தினமே 2024 - 25-ஆம் ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளை திறக்க தேவையான ஏற்பாடுகளை செய்யவும் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2024, 5:31 pm
மலேசியாவிலிருந்து சென்னை திரும்பிய இளையர் உட்பட 4 பேர் விபத்தில் பலி
September 1, 2024, 12:04 pm
தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை
August 30, 2024, 8:48 am
சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க 4 இடங்களில் போலிசார் அனுமதி
August 29, 2024, 11:11 am
அமெரிக்காவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
August 28, 2024, 12:41 pm
சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது புருணை ஏர்லைன்ஸ்
August 26, 2024, 4:13 pm