செய்திகள் மலேசியா
போரஸ் சிட்டியில் சூதாட்ட மையம் திறக்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தையா?: பெர்ஜாயா மறுப்பு
கோலாலம்பூர்:
போரஸ் சிட்டியில் சூதாட்ட மையம் திறக்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை பெர்ஜாயா குழுமம் மறுத்துள்ளார்.
ஜொகூர் போரஸ்ட் சிட்டியில் ஒரு சூதாட்ட மையத்தை திறப்பதற்காக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் டான்ஶ்ரீ வின்சன்ட தான் கலந்துரையாடலில் தாம் ஈடுபட்டதாக புளூம்பெர்க் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தி எட்ஜ் சிங்கப்பூர் வெளியிட்ட செய்தியில் தவறான தகவல்கள் உள்ளது.
மேலும் போரஸ்ட் சிட்டி தொடர்பாக அன்வாருடன் பெர்ஜாயா நிறுவனம் நடத்திய விவாதங்களை தவறான எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறினார்.
பிரதமருடன் அத்தகைய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
செய்தியில் இருந்து தவறாக வழிநடத்தும் உள்ளடக்கத்தை நீக்கி, தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துமாறு புளூம்பெர்க், தி எட்ஜ் சிங்கப்பூர் ஆகியவற்றை அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm