நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிவசுதன் மரணச் செய்தி கேட்டு குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் நடுங்கினர்: சிவநேசன்

சித்திவான்:

சிவசுதன் மரணச்  செய்தி கேட்டு குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் நடுங்கினர்

இதனை அவரின் உறவுக்காரரும் தம்பியான சிவநேசன்  கூறினார்.

பேரா லுமுட்டில் உள்ள மலேசிய கடற்படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாகின.

இந்த சம்பவத்தில் 31 வயதுடைய லெப்டினன்ட் டி. சிவசுதன் உட்பட 10 பேர் மரணமடைந்தனர்.

காலை 10.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வைரலானது.

என் அண்ணன் சிவசுதன் கடற்படை வீரருடன் ஓர் விமானியும் ஆவார்.

அவர் இந்த சம்பவத்தில் பாதிப்பப்பட்டாரா என்பதை தெரிந்துக் கொள்ள அவரின் அம்மாவுக்கு தொடர்புக் கொண்டேன்.

அப்போது சிவசுதன் இந்த சம்பவத்தில் பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.

ஆனால் சிறிது நேரத்தில் விபத்தில் உயிரிழந்தவர்களில் சிவசுதனும் ஒருவர் என உறுதி செய்யப்பட்டது.

உடனே தனது அத்தையின் வீட்டிற்கு விரைந்ததை சிவனேசன் வேதனையுடன் கூறினார்.

இந்த தகவலை கூறியதும் சிவசுதனின் குடும்ப உறுப்பினர்கள் அதிர்ச்சியில் நடுங்கிப் போனார்கள்.

சித்தியவானில் உள்ள மறைந்த சிவசுதனின் பெற்றோர் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மூன்று சகோதரர்களில் இரண்டாவது மகனான சிவசுதனின் மனப்பான்மையும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இன்னமும் நினைவுள்ளது.

தனது லட்சியங்களைத் தொடர்வதில் பின்வாங்க வேண்டாம் என அவர் அடிக்கடி நினைவுறுத்துவார் என்று சிவநேசன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset