நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மும்பை மீண்டும் தோல்வி: ராஜஸ்தான் ராயல்ஸ் வென்றது 

ஜெய்ப்பூர்:

ஐபிஎல் போட்டியின் 38-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது. 

ராஜஸ்தான் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியில் சதம் விளாசி தனது அணியின் வெற்றிக்கு உதவினார்.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.

பேட்டிங்கை தோ்வு செய்த மும்பையின் துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சா்மா 1 பவுண்டரியுடன் 6 ரன்களுக்கு வீழ்ந்தாா். உடன் வந்த இஷான் கிஷண், ரன்கள் ஏதும் சோ்க்காமலேயே வெளியேறினாா்.  

52 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது மும்பை. 

ஒன் டவுனாக வந்த சூா்யகுமாா் யாதவும் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களுக்கு நடையைக்கட்டினாா். இந்நிலையில் 4-ஆவது பேட்டராக களம் புகுந்த திலக் வா்மா, அதிரடியாக ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் சற்று நிலைத்த முஹம்மது நபி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 

பாண்டியா 10 ரன்களில் வெளியேறினார். திலக் வர்மா 65 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கோட்ஸி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

20 ஓவா்கள் முடிவில் பியூஷ் சாவ்லா 1, ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். 

ராஜஸ்தான் பௌலா்களில் சந்தீப் சா்மா 5, டிரென்ட் போல்ட் 2, ஆவேஷ் கான், யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். 

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் அணி விரட்டியது. ஜெய்ஸ்வாலும் பட்லரும் இணைந்து துவக்கம் செய்தனர். 

பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட் செய்ய வந்தார். அவருடன் 2-வது விக்கெட்டுக்கு 109 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார் ஜெய்ஸ்வால். 59 பந்துகளில் அவர் சதம் எட்டினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது இரண்டாவது சதம் இது. அவர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மறுமுனையில் பேட் செய்த சஞ்சு சாம்சன், 38 ரன்கள் எடுத்திருந்தார். 18.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து போட்டியை வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

நடப்பு சீசனில் 8 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது அந்த அணி. 

இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்களை கைப்பற்றிய ராஜஸ்தான் பவுலர் சந்தீப் சர்மா ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset