நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முகநூலில் மாமன்னருக்கு மிரட்டல் விடுத்த ஆடவருக்கு 12 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர்:

கடந்த ஆண்டு முகநூல் வாயிலாக மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு மிரட்டல் விடுத்ததற்காக செம்பனை விவசாயி ஒருவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று  12,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.

குற்றம் சாட்டப்பட்ட சம்சூரி ரம்லி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து, நீதிபதி சித்தி அமினா கசாலி இத்தண்டனையை விதித்தார்.

மேலும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் சம்சூரிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

முன்னதாக பிரதமர் அன்வாரை இறக்கவில்லை என்றால், மாமன்னரை இறக்குவோம் என அவர் முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset