செய்திகள் மலேசியா
பேருந்து தீப்பற்றி எரிந்தது: 16 பயணிகள் உயிர் தப்பினர்
ஈப்போ:
விரைவுப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அதன் ஓட்டுநரும் அதிலிருந்த 16 பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, உடனே பேருந்திலிருந்து அவர்கள் இறங்கியதால் அனைவரும் காயமின்றித் தப்பினர்.
இச்சம்பவம் ஈப்போ அருகே, வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது.
உதவி கோரி நள்ளிரவில் தங்களுக்கு அழைப்பு வந்தது என்று ஈப்போ தீயணைப்பு, மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் ஃபவாஸ் அப்துல் கூறினார்.
விரைந்து சென்ற தீயணைப்பாளர்கள், இரவு 12.50 மணியளவில் தீயை முற்றிலும் அணைத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பேருந்தின் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டுப் பகுதி தீக்கிரையாகிவிட்டது. பின்னர் பயணிகள் அனைவரும் வேறு பேருந்து மூலம் பயணத்தைத் தொடர்ந்தனர்.
பேருந்தில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 6:44 pm
மற்ற சமூகத்தின் சிறப்பு உரிமையை பற்றி இந்தியர்கள் பொறாமைப்பட்டது இல்லை: பிரபாகரன்
May 6, 2024, 2:47 pm
பைசால் மீது ஆசீட் வீசிய ஆடவருக்கு 2 நாட்கள் தடுப்புக் காவல்: ஐஜிபி
May 6, 2024, 2:26 pm