நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் மனைவியை இன்னும் நேசிக்கிறேன்: துப்பாக்கி சூடு ஆடவர்

* தடுப்பு காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிப்பு

கோத்தாபாரு:

என் மனைவியை இன்னும் நான் நேசிக்கிறேன் என்று கேஎல்ஐஏ துப்பாக்கி சூட்டை நடத்திய ஆடவர் கூறினார்.

அண்மையில் சிப்பாங் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கி சூட்டை நடத்திய ஆடவர் கோத்தா பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களை நோக்கி, 

நான் இன்னும் என் மனைவி ஃபரா  மார் இசாவை நேசிக்கிறேன். ஊடகவியாளர்களுக்கு நன்றி என அவ்வாடவர் கூறி சென்றார்.

முன்னதாக, ஹஃபிசுல் ஹவாரி இங்குள்ள கோத்தாபாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடர்ந்து காவலில் வைக்க விண்ணப்பம் செய்யப்பட்டது.

கடுமையான போலீஸ் பாதுகாப்புடன் காலை 8.35 மணியளவில் சந்தேக நபர் தடுப்பு காவல் சட்டை அணிந்து வந்தார்.

விசாரணைக்கு பின் அவரின் தடுப்பு காவல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset