நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண இறுதியாட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட்

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் முன்னேறி உள்ளனர்.

வெம்பளி அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் கோவென்ரி அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் கோவென்ரி அணியுடன் சமநிலை கண்டனர்.

இதனை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெனால்டியில் சிறந்து விளங்கிய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் கோவென்ரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset