நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா

சிங்கப்பூர்:

வளர்தமிழ் இயக்கம், தமிழ் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவற்றின் ஆதரவில் 
“இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்” என்ற கருப்பொருள் தாங்கி கடந்த ஆறு ஆண்டுகளாக சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடந்த விழா, இவ்வாண்டு ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற உள்ளது. 

சிறப்புப் பேச்சாளராக ஆஸ்திரேலியா பேராசிரியர், முனைவர்  சுல்தான் ஹலீபா “ இன்பத்தமிழும் ஆற்றல்மிகு இளைய தலைமுறையும்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவிருக்கிறார். 

உள்ளூர் மாணவ சிறப்புப் பேச்சாளரான குமாரி மு. சம்ரிதி , முனைவர் மன்னை க. இராஜகோபாலன் தலைமையில் ஐந்து மாணவர்கள் பங்கு பெறும் “ பேசும் கலை அரங்கம்” அதை அடுத்து திருமதி நர்கிஸ் பானு, முனைவர் உமையாள் ஆகியோர் எழுதி இயக்க உள்ள “நாமும் தமிழ் நம் நாவிலும் தமிழ்” என்கிற குறுநாடகம் என பல்சுவை நிகழ்ச்சிகள் அணிவகுத்து வரவுள்ளன. இந்நிகழ்சிக்கு அனுமதி இலவசம். 

தங்கள் வருகையை இந்த Google form https://forms.gle/nHJaDSye9zBr7AqG9
வழியாக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று ஏற்பாட்டுக் குழுவினர் கூறியுள்ளனர்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

+ - reset