நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லண்டன் ஹீத்ரோ விமான நிலைய எல்லை கட்டுப்பாட்டு பரிசோதனை பிரிவு அதிகாரிகள் போராட்டம் 

லண்டன்: 

புதிய வேலை விதிமுறைகளை எதிர்த்து லண்டன் ஹீத்ரோ விமான நிலைய எல்லை கட்டுப்பாட்டு பரிசோதனை பிரிவு அதிகாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த தகவலை தொழிற்சங்க யூனியன் தெரிவித்தது. 

விமான நிலையத்தின் 2,3 மற்றும் 4,5 ஆகிய முனையங்களில் பணியாற்றி வரும் சுமார் 300 பொது மற்றும் வர்த்தக சேவை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் இறங்கவுள்ளனர். 

எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் தேதி வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும். புதிய வேலை விதிமுறையினால் பல ஊழியர்கள் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று யூனியன் சங்கம் விளக்கம் அளித்தது. 

இந்த புதிய வேலை நடைமுறைக்கான விதிமுறைகளை உள்துறை அமைச்சரகம் கைவிட வேண்டும் என்று அவர்கள் கூட்டாக கேட்டுக்கொண்டனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset